வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளில் யாழை சேர்ந்த நபர் தற்கொலை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.